நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவம்- மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு!

 

நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவம்- மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு!

நாங்குநேரியில் பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மறுகால்குறிச்சி பகுதியில் வசித்து வந்த பெண்கள் சண்முகத்தாய் மற்றும் சாந்தி ஆகியோரை, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் தலையை துண்டித்து நாட்டு குண்டு வீசி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவம்- மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு!

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2019ம் ஆண்டு அப்பகுதியில் ஜாதி விட்டு ஜாதி மாறி ஒரு பெண் திருமணம் செய்து கொண்டதாகவும் அதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு பழிக்கு பழி வாங்கியதால் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்த நிலையில் இந்த கொலை நடைபெற்றிருப்பதும் தெரிய வந்தது.

நாங்குநேரியில் இரட்டை கொலை சம்பவம்- மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு!

இந்த தகவலின் பேரில் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே சண்முகத்தாய் மற்றும் சாந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிக்காத வெடிகுண்டுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், மறுகால்குறிச்சியில் இருக்கும் கால்வாய் ஒன்றில் மேலும் ஒரு வெடிக்காத வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.