பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளங்குழந்தையை எலி மருந்து கொடுத்து கொன்ற கொடூர தாய்.. திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

 

பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளங்குழந்தையை எலி மருந்து கொடுத்து கொன்ற கொடூர தாய்.. திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப சண்டைகளில் பெருமளவு பாதிக்கப்படுவது பிள்ளைகள் தான். பல பெற்றோர்கள் குடும்ப தகராறில் ஏற்படும் கோபத்தை குழந்தைகள் மீது காட்டி, அவர்களை கோபத்திற்கு இரையாக்கி விடுகின்றனர். இது போன்ற சம்பவம் திருச்சி அருகேயும் நடந்துள்ளது.

பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளங்குழந்தையை எலி மருந்து கொடுத்து கொன்ற கொடூர தாய்.. திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே வசித்து வந்த தம்பதிக்கு பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளங் குழந்தை இருந்தது. தாய் நித்யாவுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவருடனான சண்டை முற்றியதால் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த நித்யா, குழந்தைக்கு எலி மருந்து கொடுத்துள்ளார். அதில் அந்த பால் மனம் மாறாத பச்சிளங் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அதனையடுத்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நித்யாவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.