பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து இச்சைக்கு அழைத்த துப்பறிவாளன் கைது!

 

பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து இச்சைக்கு அழைத்த துப்பறிவாளன் கைது!

மதுரை ஊமச்சிக்குளம் அன்னை வேலு நகரைச் சேர்ந்த கணேஷ் ஆனந்த் , மதுரை அய்யர்பங்களா பகுதியில் ஸ்பைடர் என்ற பெயரில் தனியார் டிடெக்டிவ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு நிர்வாக பணிக்கு ஆள் தேவை என இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்த மதுரை செல்லூரைச் சேர்ந்த பெண் துப்புறிவு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். நேர்முகத்தேர்வில் அவரை கணேஷ் ஆனந்த் தேர்வு செய்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 23 அன்று அய்யர்பங்களாவில் உள்ள துப்பறிவு நிறுவனத்திற்கு அந்த பெண் பணிக்குச் சென்ற நிலையில் அலுவலக கதவுகளை அடைத்த கணேஷ்ஆனந்த், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். மறுப்பு தெரிவித்ததால் கட்டையால் அவரை தாக்கி ஆடைகளை கழட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்து, இதனை வெளியில் சொன்னால் உனது கணவரை கொன்று விடுவேன் என்றும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து இச்சைக்கு அழைத்த துப்பறிவாளன் கைது!

கணேஷ்ஆனந்த்திடமிருந்து தப்பிய அந்த பெண் நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறியதால் , ஆத்திரமடைந்த அவர் தனது நண்பர்களுடன் கணேஷ் ஆனந்தை தாக்கியுள்ளார். இது தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கணேஷ் ஆனந்த் கைது செய்யப்பட்டு அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.