ஒருதலைக் காதலை கண்டித்த காதலியின் தந்தை… அதன்பின் நடந்த விபரீதம்!

 

ஒருதலைக் காதலை கண்டித்த காதலியின் தந்தை… அதன்பின் நடந்த விபரீதம்!

ஒருதலைக் காதலை கண்டித்த காதலியின் தந்தை… அதன்பின் நடந்த விபரீதம்!

மதுரையில் ஒருதலைக் காதலை காதலியின் தந்தை கண்டித்ததால் நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினார்.

மதுரை இஸ்மாயில் புறத்தை சேர்ந்த சிக்கந்தரின் மகளை அதே பகுதியை சேர்ந்த ஆசிப் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. உடனே அந்தப் பெண் தன் தந்தை சிக்கந்தரிடம் ஆசிப் தொந்தரவு செய்வதாக கூறி உள்ளார். இதனைத்தொடர்ந்து ஆசிப்பை அழைத்து, பேசிய சிக்கந்தர், தன் மகளுக்கு தொந்தரவு செய்ய கூடாது என்று கண்டித்துள்ளார்.

ஒருதலைக் காதலை கண்டித்த காதலியின் தந்தை… அதன்பின் நடந்த விபரீதம்!

இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று தகாத முறையில் திட்டியுள்ளார். தொடர்ந்து அவரது வீட்டிலிருந்த இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவை அடித்து நொறுக்கி சேதம் படுத்தினார். இதுகுறித்து சிக்கந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தெப்பக்குளம் போலீசார், ஆசிப் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.