’20 திருக்குறள் சொன்னா போதும்..ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்’ : அட்டகாசமான அறிவிப்பு!

 

’20 திருக்குறள் சொன்னா போதும்..ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்’ : அட்டகாசமான அறிவிப்பு!

கரூர் அருகே 20 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற பெட்ரோல் பங்க்கின் அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமத்தில் வள்ளுவர் பெட்ரோல் பங்க் அமைந்திருக்கிறது. இதன் உரிமையாளர் செங்குட்டுவன். தமிழ் மீது அளவுக் கடந்த பற்று கொண்ட இவர், தற்போது இருக்கும் இளைய தலைமுறை மத்தியில் திருக்குறள் கற்றலை ஊக்குவிக்கும் விதமாக ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது 10 திருக்குறள் ஒப்புவித்தால் 1/2 லிட்டர் பெட்ரோல், 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

’20 திருக்குறள் சொன்னா போதும்..ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்’ : அட்டகாசமான அறிவிப்பு!

அதோடு இந்த போட்டியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என அறிவித்திருக்கிறார். இந்த அசத்தல் அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளும் அப்பகுதி மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு திருக்குறள் கற்றுக் கொடுத்து இலவசமாக பெட்ரோல் வாங்கிச் செல்கிறார்களாம்.

’20 திருக்குறள் சொன்னா போதும்..ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்’ : அட்டகாசமான அறிவிப்பு!

இது குறித்து பேசிய செங்குட்டுவன், மாணவர்கள் மத்தியில் தமிழ் வாசிப்பு குறைந்து வருவகிறது. அதற்காகவே இந்த இலவச பெட்ரோல் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஏப்.31ம் ஆம் தேதி வரை திருக்குறள் சொன்னால் இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும். தான் திருக்குறளை அதிக அளவில் நேசிப்பதால், மாணவர்கள் அதனை ஒப்புவிக்கும் போது இலவசமாக பெட்ரோல் வழங்கி நான் மகிழ்வதோடு அவர்களையும் மகிழ்விக்கிறேன். திருக்குறளை கற்பது நல்லது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த இலவச பெட்ரோல் திட்டத்தின் மூலமாக தான் மன நிம்மதி அடைவதாகவும் அவர் கூறியிருக்கிறார். உண்மையிலேயே இது ஒரு அட்டகாசமான அறிவிப்பு தான்..!