மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

 

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

தேனி

தேனி அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள மஞ்சி நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (55). இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், சங்கர் நேற்றிரவு சின்னமனூர் சென்று விட்டு தனது ஆம்னி வேனில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

வீரபாண்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சங்கர் ஆம்னி வேனை திருப்ப முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி, தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சங்கர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.