அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு!

 

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு!

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அய்யம்பட்டி ஏழைகாத்தம்மன் , வல்லடிக்கார சுவாமிகள் கோயில் தை மாத திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 600 மாடுகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டுப் போட்டியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு!

இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சின்னமனூரில் சேர்ந்த பார்வையாளர் முருகேசன் உயிரிழந்த நிலையில் காளீஸ்வரன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.