அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

 

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்தவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்கிற விவரங்களை போலீசார் விசாரித்து வருகிறனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

இறந்தவர் யார் எந்த ஊர் என்பது குறித்து போலீசார் விசாரித்த நிலையில், சாலை விபத்தில் இறந்தவர் வாணியம்பாடியை சேர்ந்த வி.பி.குமார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். வாணியம்பாடியில் செல்போன் கடை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!