விளம்பர பலகை வைக்கும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

 

விளம்பர பலகை வைக்கும்போது மின்சாரம் தாக்கி  ஒருவர் பலி!

விளம்பர பலகை அமைக்கும் பணியின் போது, மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பர பலகை வைக்கும்போது மின்சாரம் தாக்கி  ஒருவர் பலி!

காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதன் எதிர்புறத்தில் உள்ள கட்டிடத்தில் தனியார் நிறுவனம் தங்களது விளம்பர பலகை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. இதற்காக இளங்கோ என்பவர் விளம்பரப்பலகை வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்சார கம்பி மீது பேனர் பட்டதால் இளங்கோவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விளம்பர பலகை வைக்கும்போது மின்சாரம் தாக்கி  ஒருவர் பலி!

அத்துடன் அவருக்கு உதவி செய்ய வந்த செந்தில்குமார் என்பவரும் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில் குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன் இளங்கோவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விளம்பர பலகை வைக்க தனியார் நிறுவனம் அனுமதி பெறாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.