துப்பாக்கியால் சுட்டு ஒருவர் காயம்- உறவினர் கைது!

 

துப்பாக்கியால் சுட்டு ஒருவர் காயம்- உறவினர் கைது!

கிருஷ்ணகிரி:

தளி அருகே வேட்டைக்கு சென்ற போது பன்றி என நினைத்து உறவினரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் உறவினர் காயம் அடைந்தார். இது தொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கியால் சுட்டு ஒருவர் காயம்- உறவினர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள முதிகேரிதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 25) இவருக்கு முனியம்மா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். பழங்குடி இனத்தை சேர்ந்த ருத்ரப்பா காடுகளில் பாசி எடுக்கும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல ருத்ரப்பா ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள பனை காப்புக்காட்டில் பாசி எடுக்க சென்றார்.
அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் ருத்ரப்பாவின் வலதுபுற இடுப்பு பகுதியில் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் அலறித் துடித்து அங்கேயே சுருண்டு விழுந்தார். அப்போது காட்டுப்பகுதிக்குள் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் அவரை மீட்டு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கியால் சுட்டு ஒருவர் காயம்- உறவினர் கைது!

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் ஒசூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தளி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், ஜவளகிரி வனச்சரகர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

துப்பாக்கியால் சுட்டு ஒருவர் காயம்- உறவினர் கைது!


அதில் நேற்று ருத்ரப்பா மற்றும் பெட்டமுகிலாளம் அடுத்த கோட்டையூர் பகுதியை சேர்ந்த உறவினர் முருகேசன் (24) ஆகிய 2 பேரும் உரிமம் இல்லாத இரு நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றதும், அப்போது எதிர்பாராதவிதமாக பன்றி என நினைத்து, ருத்ரப்பாவை துப்பாக்கியால் முருகேசன் சுட்டதும் தெரிந்தது. இதையடுத்து, முருகேசனை கைது செய்த தளி போலீசார், இரு நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

-முருகன்