வேகமாக மோதியதில் காரின் மேற்புறத்தில் விழுந்த இளைஞர்.. 1 கிமீ தூரம் அப்படியே காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்!

 

வேகமாக மோதியதில் காரின் மேற்புறத்தில் விழுந்த இளைஞர்.. 1 கிமீ தூரம் அப்படியே காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்!

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் தனது பைக்கில் வானகரம் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் விபத்து ஏற்படுத்திய காரின் மீதே விழுந்துள்ளார். இதை அறியாத கார் ஓட்டுநர் வேகமாக அங்கிருந்து தப்பியுள்ளார்.

வேகமாக மோதியதில் காரின் மேற்புறத்தில் விழுந்த இளைஞர்.. 1 கிமீ தூரம் அப்படியே காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்!

இதை கண்ட போக்குவரத்து போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். இதை தொடர்ந்து காரின் மீது இருந்த ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக கே.எம்.சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

வேகமாக மோதியதில் காரின் மேற்புறத்தில் விழுந்த இளைஞர்.. 1 கிமீ தூரம் அப்படியே காரை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்!

மேலும் தொடர் விசாரணையில் காரை ஓட்டி சென்றவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேச மூர்த்தி என்பதும், இவர் திருமழிசை காய்கறி சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் மீது வழக்குபதிவு செய்த செய்துள்ளனர்.