சென்னை, திருச்சியில் அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

 

சென்னை, திருச்சியில் அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி அரசு சார்பில் சென்னை மற்றும் திருச்சியில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை, திருச்சியில் அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலம் குன்றியது. இதனால் அவர் உடனே விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

சென்னை, திருச்சியில் அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

இந்த நிலையில், நேற்று இரவு 11.15 மணி அளவில் அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். அவரது மறைவு அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அமைச்சரின் மறைவையொட்டி இன்று சென்னை மற்றும் தஞ்சையில் தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அம்மாவட்டங்களில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என அரசு அறிவித்துள்ளது.