ஊராட்சி சார்பில், பொது மக்களுக்கு கபசுர குடிநீர்- பங்குத்தந்தை,காவல்துறையினர் பங்கேற்பு
Sep 6, 2020, 13:29 IST1599379162000
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகா் காவல்துறை சரகத்திற்குட்பட்ட வெள்ளப்பட்டியில், ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கப்பட்டது.
வெள்ளப்பட்டியில் சனிக்கிழமை மாலையில் , தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயம் முன், பங்கு தந்தை எஸ்.ஏ. ராஜா தலைமையில் ,பொது மக்களுக்கு முககவசம் , கபசுர குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
தூத்துக்குடி: ஊராட்சி சார்பில், பொது மக்களுக்கு கபசுர குடிநீர்- பங்குத்தந்தை,காவல்துறையினர் பங்கேற்பு!#thoothukudi #TTN pic.twitter.com/DUkeOB8Rq1
— Top Tamil News (@toptamilnews) September 6, 2020