கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னிவேன் மோதல்; 9 மாத குழந்தை உள்பட 5 பேர் பலி!

 

கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னிவேன் மோதல்; 9 மாத குழந்தை உள்பட 5 பேர் பலி!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது ஆம்னிவேன் மோதிய விபத்தில் 9 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நர்டக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 8 பேர் நேற்று முன்தினம் குடியாத்தம் பகுதியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று மீண்டும் பெங்களுருவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள சுண்டம்பட்டி என்ற பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், சாலையோரம் நின்ற டேங்கர் லாரியின் மீது அதிவேகமாக மோதியது.

கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி மீது ஆம்னிவேன் மோதல்; 9 மாத குழந்தை உள்பட 5 பேர் பலி!

இந்த விபத்தில் ஆம்னி வேன் ஓட்டுநர் சுரேஷ், 9 மாத குழந்தை மற்றும் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.