லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை பலி…

 

லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை பலி…

கோவை

கோவை அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் பெற்றோர் கண் முன்னே ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சிவராஜ் – சத்யபிரியா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சிவசுருதி என்ற பெண் குழந்தை உள்ளது. சிவராஜ் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று குழந்தைக்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவராஜ், சோமனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆம்னிவேனில் சென்றார்.

லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை பலி…

சென்னியாண்டவர் கோயில் அருகே சென்றபோது சாலையில் முன்னால் சென்ற லாரியின் மீது எதிர்பாராத விதமாக ஆம்னிவேன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் இருந்த குழந்தை உள்பட மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

சிவராஜ் மற்றும் சத்யபிரியா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.