இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதல்; 2 இளைஞர்கள் உயிரிழப்பு

 

இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதல்; 2 இளைஞர்கள் உயிரிழப்பு

கோவை

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர்கள் ஆனந்த்(21) மற்றும் பெருமாள்(25). நண்பர்களான இருவரும், நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் கோவை மாவட்டம் மாசாணி அம்மன் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதல்; 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகேயுள்ள கொடிமேடு பகுதியில் சென்றபோது ஆனந்தின் வாகனத்தின் மீது, பொள்ளாச்சியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.