செப். 7 ஆம் தேதி ஆம்னி பேருந்துகள் இயங்காது!

 

செப். 7 ஆம் தேதி ஆம்னி பேருந்துகள் இயங்காது!

மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையையும் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தர். இதன் மூலம், மக்கள் 7 ஆம் தேதியில் இருந்து பேருந்துகளில் எந்த மாவட்டத்துக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதே போல பயணிகள் ரயில் சேவைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.

செப். 7 ஆம் தேதி ஆம்னி பேருந்துகள் இயங்காது!

இந்நிலையில் செப்டம்பர் 7 ம் தேதி ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும் இன்னும் சாலை வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காததால், ஆம்னி பேருந்துகளை இயக்க தற்போதைக்கு சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒடாத பேருந்துக்கு எப்படி சாலை வரி கட்ட முடியும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.