ஒலிம்பிக் போட்டி : 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

 

ஒலிம்பிக் போட்டி :  8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள டோக்கியோவில் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலின் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி :  8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

வருகின்ற 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்க உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். குறிப்பாக இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் தேசிய கொடி ஏந்தி செல்ல உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஒலிம்பிக் நிறைவு விழாவான ஆகஸ்ட் 8ஆம் தேதி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார். இந்த உணர்ச்சிமிகு காட்சிகளை காண ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

ஒலிம்பிக் போட்டி :  8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள டோக்கியோவில் வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலின் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டோக்கியோவின் மேற்கில் உள்ள ஹமாமட்சு நகரில் ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடந்தது. பிரேசிலின் ஜூடோ அணி வீரர்கள் தங்குவதையொட்டி நடத்த சோதனையில் 8 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத ஊழியர்கள் மட்டுமே வீரர்களுக்கு சேவையாற்றுவதாக ஜப்பான் விளையாட்டுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.