விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

 

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக்நகர் நல்லாகுப்பம் குதியைச் சேர்ந்தவர் பெருமாள் (68). இவர் பெயிண்டர் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி குமுதா. வீட்டு வேலை செய்து வருகிறார். பெருமாள் வேலைக்கு செல்வதில்லை. இன்று மதியம் அவரது மகன் லோகேஷ் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தார். அப்போது பேன் ஊக்கில் வேஷ்டியால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் பெருமாள் கிடந்தார். அதிர்ச்சியடைந்த மகன் லோகேஷ் தந்தையை காப்பாற்றி மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே பெருமாள் இறந்தது தெரியவந்தது.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

தகவல் அறிந்து குமரன் நகர் போலீசார் பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமரன் நகர் போலீசார் இறந்து போன பெருமாளின் பாக்கெட்டில் இருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், “நான் இந்த முடிவை எடுக்க காரணம் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று எழுதி இருந்தது. இதுகுறித்து குமரன் நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.