ரயில் மோதி முதியவர் பலி – யார் அவர் ? போலீசார் விசாரணை
ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் தண்டவாளத்தை கடப்பவர்கள் ரயில் மோதி இறப்பது தொடர்கதையாகி வருகிறது. அப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் மேம்பாலம் கட்டப்பட்டாலும், மேம்பாலத்தை பயன்படுத்தாமல் மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்வதை பழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று சுமார் 65 மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் முதியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயிலில் அடிபட்டு இறந்த முதியவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்து உள்ளதாக தெரிகிறது.
இறந்த முதியவர் வெள்ளை கலர் சட்டையும் சிவப்பு கலர் கால்சட்டையும் எட்டு முழ வேட்டியும் அணிந்து இருந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.