அதிமுக தலைமை கழகத்தில் களை கட்டிய பழைய உற்சாகம்!

 

அதிமுக தலைமை கழகத்தில் களை கட்டிய பழைய உற்சாகம்!

அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைமை கழகத்தில் தொண்டர்களிடம் பழைய உற்சாகத்தை காண முடிகிறது. யார் முதல்வர் வேட்பாளர் என்கிற குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்றாலும், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளதை காணமுடிகிறது.

அதிமுக தலைமை கழகத்தில் களை கட்டிய பழைய உற்சாகம்!

அதிமுக தலைமை கழகம் அமைந்துள்ள ஏரியா முழுவதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னணி நிர்வாகிகளின் தொண்டர்களால் நிரம்பி உள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை கழகத்தில் களை கட்டிய பழைய உற்சாகம்!

தலைமை கழக வளாகத்துக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், சாலைகளில் தொண்டர்கள் குழுமி கோஷங்களை போட்டு வருகின்றனர்.

அதிமுக தலைமை கழகத்தில் களை கட்டிய பழைய உற்சாகம்!

காலையில் இருந்தே கரகாட்டம், புலியாட்டம், மேள தாளங்கள் முழங்க களை கட்டியுள்ளது. இந்த கொண்டாட்டங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நிகழ்ந்தது போலவே இருப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.

செயற்குழு கூட்டத்துக்கு ஓ. பன்னீர் செல்வம் வருகை தந்தபோதும், எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்த போது மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.