கொரோனா பாதிக்கப்பட்ட வயதான தம்பதி… ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 

கொரோனா பாதிக்கப்பட்ட வயதான  தம்பதி… ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் வசித்து வந்த தம்பதி ஹீர்லால் பைரவா(75) – சாந்தி பாய்(70). இவர்களது மகன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், 18 வயதான தனது பேரன் மற்றும் மருமகளுடன் இவர்கள் வசித்து வந்தனர். மகனின் மறைவுக்கு பிறகு பேரன் மீது இவர்கள் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்ததாக தெரிகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட வயதான  தம்பதி… ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்த மூத்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை இருவரும் சம்பல் ஓவர் பிரிட்ஜ் அருகே உள்ள ரயில் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தங்கள் மூலமாக பேரனுக்கும் மருமகளுக்கும் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.