தொப்புளில் எண்ணெய் மசாஜ்… வலிகள் நீக்கும், தூக்கமின்மை போக்கும்!

 

தொப்புளில் எண்ணெய் மசாஜ்… வலிகள் நீக்கும், தூக்கமின்மை போக்கும்!

தொப்புள் வைத்தியம்… இதைக்கேட்டதும் சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். இன்னும் சிலருக்கு சிரிப்பாகவும், வெட்கமாகவும் இருக்கும். பாரம்பரிய வைத்திய முறைகளில் தொப்புள் வைத்தியமும் ஒன்று. தொப்புள் வைத்தியத்தை சரியாகச் செய்தால் எந்தப் பிரச்சினையும் வராது. தொப்புள் நம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக இருக்கிறது. 72 ஆயிரத்துக்கும் அதிகமான நரம்புகள் தொப்புளுக்குப் பின்னால் இருக்கின்றன.

தொப்புளில் எண்ணெய் மசாஜ்… வலிகள் நீக்கும், தூக்கமின்மை போக்கும்!வர்மப்புள்ளி:
தொப்புள் கொடி உறவை மிகவும் பெருமையாகச் சொல்வார்கள். கருவாக ஒரு மனிதன் உருவாகும்போது முதலில் தொப்புள் பகுதிதான் உருவாகும். அதன்பிறகே தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி இணையும். அந்த அளவுக்கு தாய்க்கும் பிள்ளைக்கும் அவ்வளவு நெருக்கமான உறவை ஏற்படுத்தக்கூடியது தொப்புள். அப்படிப்பட்ட தொப்புளில் வைத்தியம் செய்தால் பல்வேறு பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

தொப்புளில் உள்ள வர்மப் புள்ளியை அழுத்தினால் நிறைய பிரச்சினைகள் சரியாகும். செரிமானக்கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலியால் குழந்தைகள் துடிக்கும்போது வசம்பை தீயில் சுட்டு அதன் சாம்பலை தொப்புளில் தடவினால் உடனடியாக பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் மூளை சிறப்பாக வேலை செய்யவும் உதவும். குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்றுவலிக்கு பெருங்காயத்தை நீர் விட்டுக் குழைத்து தடவினால் பிரச்சினை சரியாகும்.

தொப்புளில் எண்ணெய் மசாஜ்… வலிகள் நீக்கும், தூக்கமின்மை போக்கும்!தொப்புள் சிகிச்சை:
தொப்புளில் எண்ணெய் வைத்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மணிக்கணக்கில் கம்ப்யூட்டர்முன் உட்காந்து வேலைபார்ப்பதால் வரக்கூடிய கண் வறட்சி, பார்வைக் குறைபாடுகள் சரியாகும். பித்த வெடிப்பு, கணையம் தொடர்பான பிரச்சினைகளும் சரியாகும். அதுமட்டுமல்லாமல் தலைமுடி பளபளக்கும். உதடு பளிச்சென்று மின்னும். முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பேறித்தனம், மூட்டு வலி சரியாகும். பித்த வெடிப்பு, முடி கொட்டுதல் பிரச்சினை, கை கால் குடைச்சல், தூக்கமின்மைகூட சரியாகும்.

இரவு தூங்கப்போகும் முன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் மூன்று சொட்டு தொப்புளில் வைத்து வலதுபுறமாக லேசாக தேய்த்துவிட வேண்டும். இப்படி செய்தால் வறட்சியான கண்கள், பார்வைக்குறைபாடு பிரச்சினைகள் சரியாகும். நகம், தலைமுடி, உதடுகள் பளபளக்கும். தோல் வறட்சி சரியாகும். இதேபோல் விளக்கெண்ணெயை தொப்புளில் வைத்தால் முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி சரியாகும்.

தொப்புளில் எண்ணெய் மசாஜ்… வலிகள் நீக்கும், தூக்கமின்மை போக்கும்!எளிய வைத்தியம்:
வேப்பெண்ணெய் வைத்தால் தோல் நோய்கள் சரியாகும். வெண்புள்ளி உள்ளவர்கள் இதைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வேப்பெண்ணெய் வைப்பதால் உடம்பில் உள்ள நச்சுகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயிலை தடவி வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரக்கூடிய வலி சரியாகும்.பாதாம் எண்ணெயை தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோல் பளபளவென்று இருக்கும். இதுபோன்ற எளிய வைத்தியத்தை செய்து வந்தால் நிறைய பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.