கொரோனா நீங்கும் வரை சுங்க கட்டத்தில் சலுகை… டி.டி.வி.தினகரன் கோரிக்கை

 

கொரோனா நீங்கும் வரை சுங்க கட்டத்தில் சலுகை… டி.டி.வி.தினகரன் கோரிக்கை


கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை வழங்குவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா நீங்கும் வரை சுங்க கட்டத்தில் சலுகை… டி.டி.வி.தினகரன் கோரிக்கை


இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவுகளில், “கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா நீங்கும் வரை சுங்க கட்டத்தில் சலுகை… டி.டி.வி.தினகரன் கோரிக்கை


இந்த நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது அம்மக்களை மேலும் வேதனைப்படுத்தவே செய்யும். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும்.
இன்னும் சொல்லப்போனால், கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.