“மலத்தை சாப்பிடு ,நெருப்பில் குதித்திடு” -பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை பாடாய் படுத்திய போலி மந்திரவாதி கைது ..

 

“மலத்தை சாப்பிடு ,நெருப்பில் குதித்திடு” -பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை பாடாய் படுத்திய போலி மந்திரவாதி கைது ..

பேயை வைத்து அதிகமாக சம்பாதிப்பது சினிமாக்காரர்களும் ,மந்திரவாதிகளும்தான் என்றால் அது மிகையாகாது .அப்படி ஒரு மந்திரவாதியிடம் சிக்கிய ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை சொல்லி மாளாது .

“மலத்தை சாப்பிடு ,நெருப்பில் குதித்திடு” -பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை பாடாய் படுத்திய போலி மந்திரவாதி கைது ..
மூடநம்பிக்கை நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக ஒடிசாவின் பழங்குடிப் பகுதிகளில் இன்னும் மோசமாக உள்ளது .அவர்கள் நோய் வந்தால் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, அந்த பழங்குடி மக்கள் சிகிச்சைக்காக மந்திரவாதிகள், உள்ளூர் சூனியக்காரர்கள் , ஆகியோரிடம் போகிறார்கள்.
ஒடிஷாவின் மல்கன்கிரியில் உள்ள பழங்குடி மாவட்டத்தில் ,உடலில் ஸ்ட்ரெஸ் அதிகமாகி கத்திக்கொண்டிருந்த ஒரு குடும்ப பெண்ணை பேய் பிடித்துள்ளதாக கூறி ஒரு போலி மந்திரவாதியிடம் கூட்டி சென்றுள்ளார்கள் .
அந்த மந்திரவாதியோ அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி ,அந்த பேயை விரட்டுவதற்காக அந்த பெண்ணை பன்றியின் மலத்தை திங்க வைத்தும் ,நெருப்பில் குதிக்க வைத்தும் கொடுமை படுத்தியதில் அவரின் உடலில் நெருப்பு காயங்கள் ஏற்பட்டு,அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது .

“மலத்தை சாப்பிடு ,நெருப்பில் குதித்திடு” -பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை பாடாய் படுத்திய போலி மந்திரவாதி கைது ..

இதனால் அந்த பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர் .
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ,விரைந்து வந்த போலீசார் அந்த போலியான மந்திரவாதியை திங்கள்கிழமை கைது செய்தனர் .