“குணமாக்குறேன்னு இப்படி பொணமாக்கிட்டியே “-சூனியக்காரியின் துண்டித்த தலையுடன் போலீசில் சரணடைந்த வாலிபர்..

 

“குணமாக்குறேன்னு இப்படி பொணமாக்கிட்டியே “-சூனியக்காரியின் துண்டித்த தலையுடன் போலீசில் சரணடைந்த வாலிபர்..

ஒரு கிராமத்தில் சூனியம் வைத்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு மூதாட்டி ,ஒருவரின் நோயை குணப்படுத்துவதாக பொய் சொல்லி பணம் பறித்து ,கடைசியில் அவர் இறந்து விட்டதால் கோபமடைந்த அவரின் உறவினர் ,சூனியக்காரியின் தலையை துண்டித்து ஊர்வலமாக போனதால் புவனேஸ்வர் பரபரப்புக்குள்ளானது .

“குணமாக்குறேன்னு இப்படி பொணமாக்கிட்டியே “-சூனியக்காரியின் துண்டித்த தலையுடன் போலீசில் சரணடைந்த வாலிபர்..ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகேயுள்ள ஜஜ்பூர் மாவட்டத்தில் 62 வயதான ஒரு பெண் சூனியம் செய்து வந்தார் .அவர் பல நாள்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதாகவும் ,குடும்பத்தில் சந்தோஷம் வரவைப்பதாகவும் ,எதிரிகளை கை காலை கட்டி போடுவதாகவும் சொல்லி பிழைப்பு நடத்தி வந்தார் .

“குணமாக்குறேன்னு இப்படி பொணமாக்கிட்டியே “-சூனியக்காரியின் துண்டித்த தலையுடன் போலீசில் சரணடைந்த வாலிபர்..
அவர் சொல்வது உண்மையென நம்பிய அந்த ஊரை சேர்ந்த வாலிபர் கார்த்திகா கெரே தனது உடல்நிலை சரியில்லாத உறவினர் நந்தினி பூர்த்தியை அந்த பெண்ணிடம் அழைத்துச் சென்றார். அவரை பார்த்த அந்த சூனியக்காரி நோய்வாய்ப்பட்ட இந்த மனிதன் என்னால் குணமடைவான் என்று அவர்களுக்கு உறுதியளித்தாள். ஆனால் நாளாக நாளாக அவரது உடல்நிலை மோசமடைந்து இந்த மாத தொடக்கத்தில் கட்டாக்கிலுள்ள எஸ்.சி.பி மருத்துவமனையில் இறந்தார்.
இதனால் கடும் கோபமடைந்த கெராய் அந்தப் சூனியக்கார பெண்ணைக் கோடரியால் வெட்டினார் .

“குணமாக்குறேன்னு இப்படி பொணமாக்கிட்டியே “-சூனியக்காரியின் துண்டித்த தலையுடன் போலீசில் சரணடைந்த வாலிபர்..

பிறகு அவரின் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக போய் போலீசில் சரணடைந்தார் .
போலீசார் அவர் கொண்டு வந்த துண்டித்த தலையை பார்த்து அதிர்ச்சியடைந்து ,அவரை கைது செய்து சிறையிலடைத்தனர் .