“அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்” : ஓபிஎஸ்- ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

 

“அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்” : ஓபிஎஸ்- ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

“அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்” : ஓபிஎஸ்- ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

அதில், ” கிறிஸ்து பெருமான் மண்ணுலகில் அவதரித்த மகத்தான நிகழ்வான கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. ஏழைக் குடும்பத்தின் எளிய பிள்ளையாக பிறந்து, உலகிற்கு அன்பையும் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்து, மனித குல வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்த மாண்புக்குரியவராக போற்றி வணங்கப்படும் இயேசு பெருமானின் பிறப்பு நன்னாளில் நாம் புதிய உலகம் படைக்க உறுதி ஏற்போம்.

“அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும்” : ஓபிஎஸ்- ஈபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

இருப்பவர்கள் இல்லாதவருடன் பகிர்ந்து வாழவும், ஏற்றத்தாழ்வுகளை கலைந்து எல்லாரும் இறைவனின் பிள்ளைகளாக அன்பிலும் சமாதானத்திலும் வாழ்ந்திடவும் உறுதி ஏற்று புது உலகம் படைப்போம். இயேசு பெருமான் மீது பற்றும் அவர் போதித்த அறநெறிகளில் மிகுந்த ஈடுபாடும் கொண்டு வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் எங்கள் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மலர இருக்கும் 2021 புத்தாண்டில் அனைவருக்கும் நல்லன எல்லாம் நடைபெற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.