“ஏண்டா குடிச்சிட்டு கும்மாளமடிக்கிறிங்க”-தட்டிக்கேட்ட என்ஜினீயரிங் மாணவருக்கு நேர்ந்த கதி .

 

“ஏண்டா குடிச்சிட்டு கும்மாளமடிக்கிறிங்க”-தட்டிக்கேட்ட என்ஜினீயரிங் மாணவருக்கு நேர்ந்த கதி .


நண்பரின் பர்த்டே பார்ட்டியில் குடித்துவிட்டு சத்தம் போட்டவர்களை தட்டி கேட்ட வாலிபரை அவர்கள் அடித்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது .

“ஏண்டா குடிச்சிட்டு கும்மாளமடிக்கிறிங்க”-தட்டிக்கேட்ட என்ஜினீயரிங் மாணவருக்கு நேர்ந்த கதி .


தமிழகத்தின் சென்னையில் உள்ள சூளை மேடு பகுதியில் வசிக்கும் மோசே, தனது நண்பர் எசக்கியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக கடந்த வியாழக்கிழமையன்று அரும்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எண் 302 ஐ முன்பதிவு செய்திருந்தார். அந்த அறையில் நடந்த பார்ட்டியில் மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். பிறகு அந்த நண்பர்கள் குழு சத்தமாக நடனமாடி பாடிக்கொண்டிருந்தது. அதனால் கோபமடைந்த, பக்கத்து அறையில் இருந்த பத்ரிஷும் அவரது நண்பர்களும் வெளியே வந்து அவர்களை பார்த்து சத்தம் போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மோசேயும் அவரது நண்பர்களும் ,பத்ரிஷ் மற்றும் அவரின் இரண்டு நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .பிறகு அவர்களுக்குள் அடிதடி ஏற்பட்டது .இந்தக் கலவரத்தில் பத்ரிஷ் மீது கடுமையாக அவர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மயக்கமானார்
போலீசார், தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு காயமடைந்து கிடந்த பத்ரிஷை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவரை சோதனை செய்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார் .பிறகு இந்த கலவரத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட விக்னேஷுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக அஜித் குமார் (20) விக்னேஷ் (21), வெங்கடேசன் (25), பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் பலரை தேடிவருகின்றனர்