“ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர்” : அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

 

“ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர்” : அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

ராகுல் காந்தி பதற்றமான, கணிக்க முடியாத குணம் கொண்டவர் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

“ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர்” : அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ‘A Promised Land’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் குறித்து கூறியுள்ளார்.

“ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர்” : அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

அதில் பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் ஒருமைப்பாட்டைக் கொண்டவர்கள் எனவும், ராகுல் காந்தி பதற்றமான, கணிக்க முடியாத குணம் படைத்தவர் என்றும் எழுதியுள்ளார். மாணவர் ஒருவர் பாடங்களை அதிகம் படித்து தான் சிறந்த மாணவன் என்று ஆசிரியரிடம் காட்டிக்கொள்ள ஆர்வமாக இருப்பார். ஆனால் ராகுல் காந்தி பாடங்களை கற்க ஆர்வமில்லாமல் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

“ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர்” : அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல் காந்தி இருந்தார். 2017 ஆம் ஆண்டு ஒபாமா இந்தியா வந்த போது ராகுலை சந்தித்து இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

“ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர்” : அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

ஒபாமா தனது புத்தகத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாதுகாப்பு செயலாளர் பாப் கேட்ஸ் மற்றும் ஜோ பிடன் போன்றவர்கள் குறித்த தனது கருத்தையும் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஒபாமாவின் இந்த விமர்சனத்தை தொடர்ந்து டிவிட்டரில் #Pappu என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.