தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

 

தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

அதிமுக என்றாலே ராணுவக் கட்டுப்பாடு என்கிற நிலையை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் ஜெயலலிதா. அவர் இருந்தபோது, ஆளுமை மிக்க ஒற்றைத் தலைமையாக இருந்ததைப் போல, தற்போது உருவாகியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. செயற்குழு கூட்டத்தில் அரங்கேறிய காட்சிகளே இதற்கு சாட்சி என்கின்றனர் கட்சியினர்.

தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற கேள்விக்கு விடைகாணும் வகையிலேயே செயற்குழு கூட்டம் இருந்தது. வந்திருந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், நிர்வாகிகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தது, பன்னீர் தரப்பு முற்றிலும் எதிர்பாராத விஷயமாக இருந்துள்ளது.

தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி பிரபாகரன், முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே பன்னீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

ஒரு காலத்தில் பன்னீருக்கு மிக நெருக்கமாக இருந்த நத்தம் விஸ்வநாதன் , சமீபகாலமாக பன்னீருடன் உறவாடி வருவதாக சொல்லப்பட்ட அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோரும் எடப்பாடிக்கே ‘ஜே’ போட்டுள்ளனர்.

தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

அனுதாபம் தேடிக்கொள்ள பன்னீர் வீசிய அத்தனை அஸ்திரங்களையும் மிக லாவகமாக அவருக்கு எதிராகவே எடப்பாடி திருப்பிவிட்டதை கூட்டம் ஆரவாரத்துடன் ரசித்துள்ளது.

இதன்காரணமாக, பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்துவிடும் நிலையில் உள்ளது பன்னீர்செல்வம் ஆதரவாளர் தரப்பு. ’தர்மயுத்தம்’ காலத்தில் தன் பின்னால் அணிதிரண்ட கூட்டத்தில் ஐந்து சதவீதம் கூட இப்போது இல்லாததைக் கண்டு பன்னீர் படு அப்செட் ஆகிவிட்டார் என்கிறார்கள் அவருக்கு மிக நெருக்கமானவர்கள்.

தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு வீட்டிற்குச் சென்ற ஓ.பி.எஸ், நீண்ட நேரம் தனது அறையைவிட்டு வெளியே வரவில்லையாம். நீண்ட நேரத்திற்கு பிறகு அறையைவிட்டு வெளியே வந்தவர், அங்கு காத்திருந்த சிலரிடம் ஒப்புக்கு பேசிவிட்டு வழியனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் ஓரிரு நபர்களிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். பேசி முடித்தவுடன் முகம் மேலும் இருண்டுபோனதாம்.

தனியே தன்னந்தனியே!’ – பரிதவிக்கும் பன்னீர்

செயற்குழு கூட்டத்தில் பன்னீர் தனித்துவிடப்பட்டது குறித்து கட்சியினர் கூறுகையில், ‘’ இத்தனை வருஷம் அரசியல் பண்றாரு, ஆனா, தன்னை நம்பி வந்த யாருக்கும் எதுவும் செய்யாமல் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டால் எல்லோரும் இப்படித்தான் கைவிடுவாங்க ” என முணுமுணுக்கின்றனர். செயற்குழுவுக்கு பின்னர் தனியே தன்னந்தனியே என்கிற நிலையில் உள்ளாராம் பன்னீர்.