ஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி! சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்

 

ஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி! சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்

சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டமாக மாறி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆரின் பிறந்தநாள் ஜனவரி 17 ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக என்கிற தீயச்சக்தியை அப்பறப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அதிமுக உருவாக்கப்பட்டது. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத கட்சியாக அதிமுக மாறியுள்ளது. அதிமுக தொண்டர்கள் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரை யாரும் அராஜகம் செய்வதில்லை. ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் கொடுக்க வேண்டும். அது அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது.

ஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி! சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்

அம்மா ஆட்சியில் ஏற்கனவே 11 அரை லட்சம் மக்கள் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் என கணக்கெடுத்தனர். அதில் 6 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெண்கள் நாட்டின் கண்கள் என்பார். அதற்கேற்றார் போல் தாலிக்கு தங்கம், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் சலுகை, பெண் திருமணத்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினார்கள். ஆணுக்கு பெண் சரி சமம் என்பார்கள் அதற்கான ஆட்சி தான் அதிமுக. திமுக ஆட்சியில் செய்த அட்டூழியம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியும். 10 ஆண்டு காலமாக மக்களிடையே வெறுப்பை பெறாமல் நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதிமுகவின் ஒரே எதிர் கட்சி திமுக தான். மின்சார தட்டுப்பாட்டை முழுவதுமாக நீக்கி மின்மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றியவர் ஜெயலலிதா. ஸ்டாலின் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது. மீண்டும் ஆட்சிக்கு வர துடிப்பதற்கு காரணம் லஞ்சம், லாவண்யம், அதிகார துஷ்பிரயோகம் செய்ய துடிக்கிறார் ஸ்டாலின். தமிழக முதல்வராக ஸ்டாலின் வர தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத்தரும் இடத்தில் இருந்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத கட்சிதான் திமுக” எனக் குற்றஞ்சாட்டினார்.