வேலை இல்லாதோருக்கு 100 நாள் திட்டத்தில் வேலை தருக – ராகுல் காந்தி கோரிக்கை!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22,15,074 லிருந்து 22,68,675 ஆக அதிகரித்துள்ளது. இங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 15.83 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில் கொரோனா உயிரிழப்பு 45,257 ஆக உள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.
வேலை மற்றும் அதற்கான ஊதியமின்றி பசியால் வாடும் மக்களுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அது திருப்திகரமாக இல்லை என்பது தான் பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.
शहर में बेरोज़गारी की मार से पीड़ितों के लिए MGNREGA जैसी योजना और देशभर के ग़रीब वर्ग के लिए NYAY लागू करना आवश्यक हैं। ये अर्थव्यवस्था के लिए भी बहुत फ़ायदेमंद होगा।
क्या सूट-बूट-लूट की सरकार ग़रीबों का दर्द समझ पाएगी? pic.twitter.com/jR6mqI96S7
— Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2020
இந்நிலையில் ஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவது அவசியம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். குறைந்த வருவாய் அளிக்கும் NYAY திட்டத்தில் வேலை வழங்கினால் இந்திய பொருளாதாரமும் உயரும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.