வீட்டு வேலை செய் என கண்டித்த தாய்… தீக்குளித்த நர்சிங் மாணவி!- வந்தவாசியில் அதிர்ச்சி

 

வீட்டு வேலை செய் என கண்டித்த தாய்… தீக்குளித்த நர்சிங் மாணவி!- வந்தவாசியில் அதிர்ச்சி

வீட்டி வேலை செய்யாமல் இருந்த தாய் கண்டித்ததால் வேதனையில் நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வந்தவாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் இரண்டாவது மகள் சந்தியா (20). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். செவ்வாய் மாலை வீட்டில் தனியாக இருந்த சந்தியா திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடோடி வந்த அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 90 சதவிகித தீக்காயங்களுடன் இருந்த சந்தியா, உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, சந்தியாவின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, சந்தியாவின் தாய், அவரை வீட்டு வேலைகள் செய்யாதது குறித்து திட்டியுள்ளார். அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. எனினும் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.