காதல் தோல்வியால் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!

 

காதல் தோல்வியால் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த செவிலியர் தூக்கட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி. விவசாயி. இவரது மகள் ஸ்வேதா (17). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது, மருத்துவமனையில் பணி புரிந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

காதல் தோல்வியால் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை!

அந்த இளைஞர் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், காதலுக்கு ஸ்வேதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஸ்வேதா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கருணாநிதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.