’’ஒண்ணாம் நம்பர் துராகியே… வரலாறு மன்னிக்காது’’

 

’’ஒண்ணாம் நம்பர் துராகியே… வரலாறு மன்னிக்காது’’

பொதுத்துறை சொத்துக்கள் நூறு கோடி இந்துக்களுக்கும் சொந்தம்! அவற்றை அதானி, அம்பானி என்று ஒரு சிலருக்கு தூக்கி தருவது அந்த இந்துக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம். மோடி அரசு இந்து விரோத அரசு என்ற மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணனுக்கு, பொது துறை சொத்துகளை ஊழலால் கொள்ளையடித்தது காங்கிரஸ். ‘தோழர்’ என்ற பெயரில் சுரண்டியது கம்யூனிஸ்டுகள். இந்தியாவின் வளர்ச்சியை தடுத்த இரு கட்சிகளும் முறையே தேச விரோத, தொழிலாளர் விரோத கட்சிகள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

’’ஒண்ணாம் நம்பர் துராகியே… வரலாறு மன்னிக்காது’’

இதன்பின்னர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் அருணன். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எடப்பாடிபழனிச்சாமி ஆதரித்து பேசியதால்தான் அவரை, ‘’எடப்பாடி விவசாயி அல்ல, துரோகி. தன்னை காப்பாற்றிக் கொள்ள மோடி தயவு வேண்டும் என்று விவசாயி விரோத சட்டங்களை ஆதரிப்பவர் ஒண்ணாம் நம்பர் துரோகியே. இவரை வரலாறு மன்னிக்காது’’ என்று அருணன் சொல்ல,

’’ஒண்ணாம் நம்பர் துராகியே… வரலாறு மன்னிக்காது’’

சிங்கூர் மற்றும் நந்திகிராமில் விவசாயிகளை கொன்று குவித்து, சொத்துகளை கொள்ளையடித்தது கம்யூனிஸ்ட் அரசு. ஏழை தொழிலாளி முன்னேறக்கூடாதென்ற கொள்கையை பின்பற்றும் தொழிலாளி துரோகியே கம்யூனிஸ்டுகள். உங்களை வரலாறு மன்னிக்காததாலேயே வேரோடும் வேரடி மண்ணோடும் உங்கள் சித்தாந்தம் அழிக்கப்பட்டது என்று நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார்.