தமிழ்நாடு பெயரை மாற்ற நினைக்கிறீங்களா? நான் இந்தியாவோட பெயரையே மாத்துவேன் : சீமான் ஆவேசம்!!

 

தமிழ்நாடு பெயரை மாற்ற நினைக்கிறீங்களா? நான் இந்தியாவோட பெயரையே மாத்துவேன் : சீமான் ஆவேசம்!!

திருச்சியில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 9 பேரை ஆதரித்துப் பேசிய சீமான் சத்திரம் பேருந்து நிலையம் அருகே தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் , “அரசியல் விடுதலை என்பது மட்டும்தான் நம்மிடமுள்ள கடைசியான வாய்ப்பு . நான் அரசியல் கட்சி தொடங்கி பிழைக்க வந்தவன் அல்ல . படம் எடுத்து பிழைக்க வந்தவன்; என் இன மானமா? வருமானமா என வந்தபோது நான் இனமானம் என்ற முடிவெடுத்து அரசியலுக்கு வந்தேன்.

தமிழ்நாடு பெயரை மாற்ற நினைக்கிறீங்களா? நான் இந்தியாவோட பெயரையே மாத்துவேன் : சீமான் ஆவேசம்!!

அதிமுக அம்மாவின் ஆட்சி என்று கூறும் தினகரன் அம்மாவின் ஆட்சி நடத்துவதுவோம் என்று சொல்கிறார். அவர்கள் சொல்லும் அம்மா இப்போது இல்லை. அதேபோல ஸ்டாலினால் அப்பாவின் ஆட்சியை நடத்துவேன் என்று கூற முடியுமா? நிலவை காட்டி சோறு போடலாம். இவர்கள் பூச்சாண்டியை காட்டி சோறு ஊட்ட நினைக்கின்றனர். அதுதான் பாஜக பூச்சாண்டி” என்றார்.

தமிழ்நாடு பெயரை மாற்ற நினைக்கிறீங்களா? நான் இந்தியாவோட பெயரையே மாத்துவேன் : சீமான் ஆவேசம்!!

“உழைக்காமல் மக்களை சோம்பேறி ஆக்கி கொண்டு இருக்கின்றனர் திராவிட கட்சிகள்.இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்குது நினைக்கிறது பாஜக. முடிந்தால் உள்ளே வரட்டும் நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைத்து விடுவேன். பிரதமர் ,உள்துறை அமைச்சர் ,நிதியமைச்சர் என பாஜக கைவசம் இத்தனை பேர் இருந்தும் 20 தொகுதிகளில் தான் பாஜக போட்டியிடுகிறது. அதிலும் அவர்கள் ஜெயிக்கப் போவதில்லை .நேரமாகிவிட்டது என்மீது வழக்கு போட்டு விடுவார்கள் ; நான் என்றால் உடனடியாக செயல்படுவார்கள்; அவ்வளவு நேர்மையான அரசு இது” என்று கடுமையாக சாடினார்.