“எம்எல்ஏக்களை தக்க வைத்து கொள்ள முடியாத நாராயணசாமி” : எதிர்க்கட்சி தலைவர் கிண்டல் !

 

“எம்எல்ஏக்களை  தக்க வைத்து கொள்ள முடியாத நாராயணசாமி” : எதிர்க்கட்சி தலைவர் கிண்டல் !

காங்கிரஸால் தங்கள் எம்எல்ஏக்களை தக்கவைக்க முடியவில்லை என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது என்று பேரவையில் சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வியை தழுவியுள்ளது. இதையடுத்து நாராயணசாமி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.

“எம்எல்ஏக்களை  தக்க வைத்து கொள்ள முடியாத நாராயணசாமி” : எதிர்க்கட்சி தலைவர் கிண்டல் !

இந்நிலையில் சட்டப்பேரவை வெளியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்த நிலையில், புதுச்சேரி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினோம். நாராயணசாமியால் தங்கள் எம்எல்ஏக்களை தக்கவைக்க முடியவில்லை. நீங்கள் மக்களுக்கு எதுவும் செய்யாததால் உங்களை விட்டு உறுப்பினர்கள் விலகி உள்ளார்கள். விவசாயிகள், பள்ளி மாணவர்களுக்கு நாராயணசாமி அரசு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார்.

“எம்எல்ஏக்களை  தக்க வைத்து கொள்ள முடியாத நாராயணசாமி” : எதிர்க்கட்சி தலைவர் கிண்டல் !

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பதற்காக முதல்வர் நாராயணசாமி புறப்பட்டார் என்பது கூடுதல் தகவல்