புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை.. விழிபிதுங்கும் காங்கிரஸ் கூட்டணி!

 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை.. விழிபிதுங்கும் காங்கிரஸ் கூட்டணி!

தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை ௮ மணிக்கே அனைத்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக 85 தொகுதிகளிலும், அதிமுக 63 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை.. விழிபிதுங்கும் காங்கிரஸ் கூட்டணி!

புதுச்சேரியை பொறுத்தவரையில் என்.ஆர்.காங்கிரஸ் 5 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் இதை எதிர்த்து என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி களம் கண்டது.

இந்த தேர்தலுக்கு முன்னர், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்த பிரச்னையில் இருந்தே காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.