முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் – அமைச்சர் செங்கோட்டையன்

 

முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா காலத்தில் முழு கல்வி கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸால் கடந்த 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைனில் பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியிருக்கும் நிலையில், மக்களின் நலனுக்காக பல சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை முழுவதுமாக வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு கல்விக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் – அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், ‘கொரோனா காலத்தில் முழு கல்வி கட்டணம் வசூலித்த 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார். கொரோனா நிலவரம் குறித்த ஆய்வுக்கு பிறகே, பெற்றோர் மாணவர் மனநிலை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும். செப்டம்பர் 21 முதல் 25 வரை அணிவகுப்பு நடத்த கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.