‘ஐ.டி.ரெய்டில் எதுவும் சிக்கவில்லை; பாஜகவை ஏவி விடும் அதிமுக’ : துரைமுருகன்

 

‘ஐ.டி.ரெய்டில் எதுவும் சிக்கவில்லை; பாஜகவை ஏவி விடும் அதிமுக’ : துரைமுருகன்

வருமான வரி சோதனை குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

‘ஐ.டி.ரெய்டில் எதுவும் சிக்கவில்லை; பாஜகவை ஏவி விடும் அதிமுக’ : துரைமுருகன்

திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான் கல்லூரி, கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். எ.வ. வேலுவை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டிருக்கும் சூழலில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா என்ற புகாரின் அடிப்படையில் எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றதாக தகவல் வெளியானது.

‘ஐ.டி.ரெய்டில் எதுவும் சிக்கவில்லை; பாஜகவை ஏவி விடும் அதிமுக’ : துரைமுருகன்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரி உட்பட ஐ.டி. ரெய்டு நடந்த இடங்களில் எதுவும் சிக்கவில்லை. திமுகவை தேர்தல்களத்தில் வெல்ல முடியாது என்பதால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக அரசு. இது போன்ற செயல்கள் அதிமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. ஐ.டி. ரெய்டு நடத்தினால் பயந்து போய் விடுவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது. திமுகவை தேர்தல் களத்தில் வெல்லமுடியாது என்பதால் இதுபோன்ற சோதனை நடத்துகின்றனர் என திமுக வேட்பாளர் எ.வ வேலு வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்து கூறியுள்ளார்.