குடிக்க விடாத டாக்டர் -கோவப்பட்ட கொரானா நோயாளி -என்ன செஞ்சாரு பாருங்க ?
ஒரு கொரானா நோயாளிக்கு குடிக்க முடியாததால் சிகிச்சை மையத்திலிருந்து தப்பி சென்று விட்டார் .
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள கடக்கில் வசிக்கும் ஒரு தொழிலாளிக்கு அடிக்கடி தலைவலி வந்ததால் அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார் .அப்போது அவரை அங்கிருந்த டாக்டர்கள் கொரானா டெஸ்ட் எடுத்தனர் .அந்த டெஸ்ட்டில் அவருக்கு பாசிட்டிவ் என்று முடிவு வந்தது .அதனால் அங்கிருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை அங்கு அட்மிட் செய்தனர் .அப்போது அங்கு குடிக்க அனுமதி கிடையாது என்பதை அந்த நபர் அறிந்தார் .அதனால் குடிகாரரான அவரால் அங்கு இருக்க முடியவில்லை .பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .அவரை சுகாதார துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்
இது பற்றி புட்டூர் நகர நகரசபையின் மூத்த சுகாதார ஆய்வாளர் ஸ்வேதா கிரண் கூறுகையில், இந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு தலைவலி இருப்பதாக கூறினார் .அதனால் கடந்த செவ்வாயன்று அவர் கொரானா டெஸ்ட் பரிசோதிக்கப்பட்டார். அவர் தனக்கு தொற்று இருப்பதை தெரிந்து கொண்டதும் அவர் சோதனை மையத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டார் “என்றார் .
இப்போது அவரை அந்த பகுதியில் போலீசாரும் ,சுகாதார துறையினரும் தேடி வருகின்றனர் .ஆனாலும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை .