‘மனைவியுடன் தகராறு’ – ரயில் முன் பாய்ந்து வடமாநில தொழிலாளி தற்கொலை!

 

‘மனைவியுடன் தகராறு’ – ரயில் முன் பாய்ந்து வடமாநில தொழிலாளி தற்கொலை!

மனைவியுடன் போனில் பேசிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளி திடீரென ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இருக்கும் தளவாய் பகுதியில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. தனியாருக்கு சொந்தமான அந்த ஆலையில், அனோகி லால்ஷா(40) என்ற நபர் பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், லால்ஷாவும் தனது சொந்த ஊரான பீகாருக்கு சென்றுள்ளார்.

‘மனைவியுடன் தகராறு’ – ரயில் முன் பாய்ந்து வடமாநில தொழிலாளி தற்கொலை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அவர் பீகாரில் இருந்து, மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லால்ஷா தனது மனைவியுடன் போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். ஈச்சங்காடு ரயில் நிலையம் அருகில் அவர் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த லால்ஷா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.