“அடப்பாவிங்களா !படிக்க அனுப்பின பொண்ணை பொணமாக்கிட்டிங்களே “பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் கதறல்..

 

“அடப்பாவிங்களா !படிக்க அனுப்பின பொண்ணை பொணமாக்கிட்டிங்களே “பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் கதறல்..

பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு 14 வயது மாணவி ,பள்ளியின் வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பள்ளி மாணவர்களிடையே பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.

“அடப்பாவிங்களா !படிக்க அனுப்பின பொண்ணை பொணமாக்கிட்டிங்களே “பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் கதறல்..உ.பி.யின் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் ஹரியானாவின் மகேந்திரகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .இந்நிலையில் ஜூலை 3ம் தேதியன்று அந்த மாணவி அந்த பள்ளியின் வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அதனால் அந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே ,செய்தி கேட்டு ஓடி வந்த அவரின் பெற்றோர் மாணவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர் .அப்போது அவர்கள் பள்ளியில் தங்களது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டினர் .

“அடப்பாவிங்களா !படிக்க அனுப்பின பொண்ணை பொணமாக்கிட்டிங்களே “பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் கதறல்..

ஆனால் அதை பொருட் படுத்தாத பள்ளி நிர்வாகம் ,சில ஆவணங்களில் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு ,குடும்ப பிரச்சனையால் அவர் தற்கொலை செய்ததாக கூறி போலீசார் உதவியுடன் அடக்கம் செய்து விட்டனர் .மேலும் அவரின் தற்கொலை குறிப்பில் தனது சாவுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல ,குடும்ப பிரச்சினையே காரணம் என்று எழுதியுள்ளதாக போலீசார் கூறுகிறார்கள் .
இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் முதல்வருக்கு மகளின் சாவிலிருக்கும் மர்மத்தை கண்டறிய கோரி மனு அளித்தார்கள் .

“அடப்பாவிங்களா !படிக்க அனுப்பின பொண்ணை பொணமாக்கிட்டிங்களே “பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் கதறல்..இது பற்றி அந்த பெண்ணின் தந்தை கூறுகையில் தனது மகள் தூக்கில் தொங்கியபோது தான் பார்த்தபோது, அவர் உடல் நீல நிறமாக இருந்ததாகவும் ,உடைகள் கிழிந்திருந்ததாகவும் ,தன்னால் வழக்குக்கு சிலவு செய்ய முடியாதெனவும் ,மகளின் மரணத்திற்கு நீதி வேண்டுமெனவும் கூறியது சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது .