புயல் பாதித்த பகுதிகளில் வேலை நிறுத்தம் இல்லை! தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

 

புயல் பாதித்த பகுதிகளில் வேலை நிறுத்தம் இல்லை! தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளை அறிவித்திருந்த பொது வேலை நிறுத்தம், புயல் பாதித்த பகுதிகளில் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் வேலை நிறுத்தம் இல்லை! தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நவம்பர் 26 ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து வேலை நிறுத்த அறிவிப்பினை சூழலுக்கு ஏற்றவாறு நடத்த திட்டமிட்டுள்ளதாக, தொழில் சங்க கூட்டமைப்பு சா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் வேலை நிறுத்தம் இல்லை! தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

அந்த அறிக்கையில், புயல் பாதித்த 13 மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களில், அத்தியாவசிய பணி ஊழியர்கள் வழக்கம்போல பணிக்குச் சென்று நிவாரண, மீட்பு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.