ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுபாடா? .. தமிழிசை விளக்கம்!

 

ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுபாடா? .. தமிழிசை விளக்கம்!

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகளவில் பதிவாகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் உயர்நிலை கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தின் முடிவில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டார்.

ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுபாடா? .. தமிழிசை விளக்கம்!

கடைகள், அங்காடிகள், உணவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் கட்டுப்பாடுகளை விதித்தார். அதே போல ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையில், புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. நோயாளிகளின் உறவினர்களை வெளியே சென்று அந்த மருந்தை வாங்கி வரச் சொல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுபாடா? .. தமிழிசை விளக்கம்!

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது. போதுமான அளவுக்கு இருக்கிறது. அந்த செய்தியைக் கேட்டவுடனே சுகாதாரத்துறை செயலாளரிடம் விசாரித்தேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினேன். கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார்.