“முல்லையாக சித்ராவை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது” : நடிகை சரண்யா பதிவு!

 

“முல்லையாக சித்ராவை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது” : நடிகை சரண்யா பதிவு!

முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி குறித்து நடிகை சரண்யா விளக்கமளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தற்கொலை தான் என்றாலும் அவரை தற்கொலைக்கு தூண்டியது எது? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“முல்லையாக சித்ராவை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது” : நடிகை சரண்யா பதிவு!

இந்த சூழலில் முல்லை கதாபாத்திரத்தில் இனி யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விடையாக சமூகவலைதளங்களில் அடிபட்ட பெயர் நடிகை சரண்யா. இவர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, ரன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

“முல்லையாக சித்ராவை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது” : நடிகை சரண்யா பதிவு!

மறைந்த நடிகை சித்ராவின் நெருங்கிய தோழியாக இருந்து வந்த சரண்யா அவரது இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட அவருடன் இருந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எனவே முல்லை கதாபாத்திரத்தில் சரண்யா தான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

“முல்லையாக சித்ராவை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது” : நடிகை சரண்யா பதிவு!

இந்நிலையில் நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘முல்லை கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாகக் செய்திகள் வெளியாகி வருகின்றன. அது உண்மையில்லை. முல்லை கதாபாத்திரத்தை சித்ராவுக்கு பதிலாக யாரும் மாற்றாக இருக்க முடியாது என நான் நம்புகிறேன். முல்லையாக அவள் பெற்ற அங்கீகாரம் கடைசி வரை அப்படியே இருக்கட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.