இனி கொடைக்கானலில் இபாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம்!

 

இனி கொடைக்கானலில் இபாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம்!

இனிமேல் இபாஸ் இல்லாமல் கொடைக்கானலின் மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லலாம் என உதவி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக 5 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்தது. மால்கள், பூங்காக்கள் அனுமதி அளித்த அரசு கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இனி கொடைக்கானலில் இபாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம்!

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலை சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். முதற்கட்டமாக பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை திறக்கப்படும் என்றும் வெளிமாவட்ட பயணிகள் இபாஸ் உடனும், உள்மாவட்ட பயணிகள் அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும் சுற்றுலா செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இனி கொடைக்கானலில் இபாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம்!

இந்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு பேருந்துகளில் இபாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம் என உதவி ஆட்சியர் அறிவித்துள்ளார். கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவினுள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும் கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா தலங்களும் படிப்படியாக திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.