இனி ஒரு முன்களப் பணியாளரைக் கூட இழக்கக் கூடாது! – முதல்வரின் தனிச் செயலாளர் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
கொரோனா பாதிப்பு காரணமாக முதல்வரின் தனிச் செயலாளர் தாமோதரன் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் தனிச்செயலாளர் திரு.தாமோதரன் #Covid19 காரணமாக இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆழ்ந்த இரங்கல்கள்!
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்களின் பாதுகாப்பை @CMOTamilNadu உறுதி செய்திட வேண்டும்.
இனி ஒரு முன்களப் பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது!
— M.K.Stalin (@mkstalin) June 17, 2020
கொரோனா பாதிப்பு தலைமைச் செயலகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. முதலமைச்சரின் தனிச் செயலாளர் தாமோதரன் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாமோதரன் மறைவுக்கு தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கதில், “முதலமைச்சரின் தனிச்செயலாளர் திரு.தாமோதரன் கோவிட்19 காரணமாக இறந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்! அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்திட வேண்டும். இனி ஒரு முன்களப் பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது!” என்று கூறியுள்ளார்.