`எஃப்.சி காட்ட வந்தார் ; இன்ஸுரன்ஸ் செய்ய சொன்னார்!’- ஆர்டிஓ அலுவலகத்தில் ஆட்டோவை எரித்த டிரைவர்

 

`எஃப்.சி காட்ட வந்தார் ; இன்ஸுரன்ஸ் செய்ய சொன்னார்!’- ஆர்டிஓ அலுவலகத்தில் ஆட்டோவை எரித்த டிரைவர்

ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த ஆட்டோ டிரைவர், எஃப்.சி காட்ட வந்த இடத்தில் இன்ஸுரன்ஸ் செய்ய சொன்னதால் வேதனை அடைந்த அவர், தனது ஆட்டோவை எரித்தார். இந்த சம்பவம் சென்னை அண்ணாநகரில் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாண்டமுத்து என்பவர் சென்னை அயனாவரம் சோலைத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி வரும் இவர், நேற்று தனது ஆட்டோவிற்கு எஃப்.சி செய்வதற்காக அண்ணா நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார் தாண்டமுத்து. அப்போது ஆட்டோவை ஆர்.ஐ ஆய்வு செய்துள்ளார். பின்னர் ஆட்டோவின் இன்ஸுரன்ஸ் கடந்த 27-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது என்றும் அதை புதுப்பித்துக்கொண்டு வருமாறும் கூறியுள்ளார் ஆர்.ஜ.

கொரோனா ஊரடங்கால் ஆட்டோ ஓடவில்லை. இதனால் வருமானத்தை இழந்து தவித்தார் தாண்டமுத்து. இதனால் ஆட்டோவுக்கு இன்ஸூரன்ஸ் கட்ட இயலாது எனக்கூறிய தாண்டமுத்து ஆட்டோவை எஃப்.சி (FC) செய்து தருமாறு கூறியுள்ளார். ஆனால், எஃப்.சி செய்ய ஆர்.ஐ மறுத்துவிட்டார். இதனால் வேதனை அடைந்த தாண்டமுத்து ஆட்டோவை நடு ரோட்டில் வைத்து ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதோடு, தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்த வில்லிவாக்கம் தீயணைப்புத் துறையினரும், அண்ணா நகர் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வில்லிவாக்கம் தீயணைப்புத் துறையினர் ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் தாண்டமுத்து மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தாண்டமுத்து கண்ணீருடன், ஊரடங்கால் ஆட்டோவை ஓட்ட முடியாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்தேன். தற்போது, ஆட்டோ ஓட்ட முடிவு செய்தேன். ஆனால், எஃப்.சி காட்ட ஆர்டிஓ அலுவலகத்துக்கு வந்தேன். ஆனால், இன்ஸூரன்ஸ் கட்ட சொன்னார் ஆர்.ஐ. என்னால் இன்ஸூரன்ஸ் கட்ட பணம் இல்லை. இந்த வேதனையில்தான் ஆட்டோவை தீ வைத்து எரித்தேன்” என்று கூறினார்.