தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது!

 

தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது!

தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை கிடையாது என டிஜிபி சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பணிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும் பேனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வாக்கு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணிகளிலும், பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணிகளிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல் ஆணையர், அனைத்து மண்டல ஐஜி, டி.ஐ.ஜிகளுக்கு டி.ஜி.பி. திரிபாதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சட்டமன்ற தேர்தல் வரை காவல்துறை அதிகாரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அவசர தேவைகளை தவிர்த்து விடுமுறை இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.